விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் இந்திய அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்திருப்பது நியாயமா என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இலங்கையில் இதுநாள்வரை எந்தவிதமான தாக்குதல்களும் நடைபெறவில்லை என்பதைக் காணும் போது, விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதும், அவர்கள் இனி ஒன்றுசேர்ந்து செயல்பட்டாலும்கூட, அவர்களது போராட்டம் அரசியல் போராட்டமாக மாறுவதற்குத்தான் அதிக இடமிருக்கிறது என்றும் தோன்றுகிறது. மீண்டும் ஆயுதப் போராட்டமாக அமைவது என்பது உடனடியாகச் சாத்தியமில்லை என்று தெரிகிறது.
தற்போதும்கூட, சர்வதேச அளவில், மலேசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சட்ட விரோதமாக ஆயுதம் வாங்கியதற்கான வழக்குகளை எடுத்துக் கொண்டாலும் அவை யாவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முன்பாகத்தான் இருக்குமேயொழிய, அதன் பிறகு அல்ல.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் மீதான தடையை இந்திய அரசு தானாகவே விலக்கிக் கொண்டிருந்தாலும்கூட அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் ஏற்பட்டிருக்காது. ஆனால், தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் 3 அமர்வுகளிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்படுவதும், நீதிபதியோ இந்த எதிர்தரப்பு கருத்தைச் சொல்ல வேண்டியவர்கள் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்தான் என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமாக இருக்கும் வரையில், இங்கே விடுதலைப் புலிகள் என்று சொல்லிக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைபவரை இந்திய அரசு கைது செய்து இலங்கையிடம் ஒப்படைப்பதுதான் சட்டப்படியான நடவடிக்கையாக இருக்க முடியும். அப்படியிருக்கும்போது, விடுதலைப் புலிகள் எப்படி இங்கே இந்த நடுவர் மன்றத்தின் முன்பாக ஆஜராகி, தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியும்?
அவ்வாறு நடுவர் மன்றத்தின் முன்பு அவர்கள் சொல்ல வேண்டும் என்பதுதான் விதிமுறையாக இருக்குமானால், அப்படியாக கருத்துத் தெரிவிக்க வரும் விடுதலைப் புலிகள் யாரும் கைது செய்யப்படாமல், அவர்கள் தாங்கள் விரும்பிய நாடுகளுக்குச் செல்வதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்கினால்தானே அவர்கள் கருத்துத் தெரிவிக்க வருவார்கள்?
ஊட்டியில் நடைபெற்ற இந்த நடுவர் மன்றத்தின் 3வது அமர்வில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் பி.கே.மிஸ்ரா, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்று வாதிட்டுள்ளார்.
இதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் இரண்டு: முதலாவதாக 2008-க்குப் பிறகு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சிலர் பிரச்னைகளை எழுப்புகின்றனர். இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இரண்டாவதாக, நாடுகடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்களாக 115 பேரில் பலருக்கு விடுதலைப் புலிகளின் இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. இந்தியாவில் இவர்களில் சிலருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது.
இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனித்தாக வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இல்லை. இரண்டாவதாக, நடந்து முடிந்திருக்கும் ஈழப் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழலைத்தான் கருத்தில்கொள்ள வேண்டுமே தவிர, அதற்கு முந்தைய சூழலை கவனத்தில் கொள்வது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது.
ஆனால் இதை உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் முன்வைக்கும்போது, இதற்கு மறுப்புத் தெரிவிக்கவும், இந்தக் கருத்தில் மாற்றுக்கருத்து இருப்பதையும் சொல்ல வேண்டியவர்கள் இங்குள்ள பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் மட்டுமே. அவர்கள் குரலுக்குத்தான் மத்திய அரசின் காதுகளைச் சென்றடையும் வலிமை இருக்கிறது. ஆனால் அவர்களோ, தங்களுக்கும் இந்தப் பிரச்னைக்கும் தொடர்பே இல்லாததுபோல மௌனம் சாதிக்கின்றனர். அவர்களுடைய தமிழ் இனப்பற்று அத்தகையது.
மேலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோவும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறனும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்துச் சிறை சென்றவர்கள். இவர்கள் விடுதலைப் புலிகளின் வெளிப்படையான ஆதரவாளர்கள், ஆதரித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற நிலையில், இவர்தம் கருத்துகளை ஏன் விடுதலைப் புலிகளின் கருத்தாகப் பதிவு செய்யக்கூடாது?
விடுதலைப் புலிகள் சிலருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையாக இருந்தாலும், அவை பழைய தொடர்புகளின் எச்சமாக இருக்குமே தவிர, புதிய தொடர்புகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதுதான் இலங்கையில் நிலவும் இன்றைய சூழல் உணர்த்துகிறது.
ஒன்று விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கி அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் சார்பில் வாதிட அவர்களது ஆதரவாளர்களை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அது என்ன நடுவர் மன்றம்? ஏன் இந்த அமர்வுகள்?
இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டாலும்கூட, இந்தியா மறக்காது என்றால், ராஜபக்ச நீதியைக்கூடப் புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது, இந்திய அரசின் இந்த ராஜநீதியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
Thursday, October 21, 2010
Wednesday, October 20, 2010
மக்களை வதைக்கிறதா இலவச வீடு திட்டம்?
''தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்கக்கூடாது என்பதற்கு மாற்றாக கான்கிரீட் வீடுகளை கட்டித்தரும் ஒரு அற்புதமான திட்டம்தான் கலைஞர் வீடு வழங்கும் திட்டம். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகளை கட்டி முடிக்கவேண்டும் என்று அறிவித்து, முதல் ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தோம். முதல் கட்டமாக இந்த 3 லட்சம் வீடுகளும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் திறந்துவைக்கப்பட இருக்கிறது'' என்று சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முதல் வீட்டை கடந்த 10ஆம் தேதி கடலூரில் பயனாளி ஒருவருக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்த கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தால் பொதுமக்களுக்கு என்ன பயன் என்பதுதான் கேள்வி.
இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட தமிழக அரசு சார்பில் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். எப்படி அந்தப் பணம் வழங்கப்படுகிறது என்றால், முதலில் வீட்டிற்கு அஸ்திவாரம் போட 6 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. எப்போது என்றால், முன்பணம் 6 ஆயிரம் ரூபாய் போட்டு அஸ்திவாரம் போட வேண்டுமாம். பின்னர் அதற்குரிய பில்லை காட்டி 6 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதைத் தொடர்ந்து 56 கிலோ கம்பி, 56 கிலோ சிமெண்ட் மூட்டை வாங்க அரசு அனுமதி அளிக்கிறது. இதனை அனைத்தையும் வாங்கி வீடு கட்டும் அந்த பயனாளி, பில் காட்டி அதற்குண்டான பணத்தை பெற்றுக் கொள்கிறார். இதையடுத்து ஜன்னல், கதவு வாங்க 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதுவும் முன்பணம் போட்டு கதவு, ஜன்னல் வைத்து பில் காட்டியபிறகே 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.
இப்படி முன்பணம் போட்டு வீடு கட்டும் அளவில் ஏழை மக்கள் இல்லை. இப்படி முன்பணம் போட்டு வீடு கட்டும் நிலை இருந்தால் ஏன் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் வீடு கட்ட நினைப்பார்கள்.
நடந்த நிகழ்வு ஒன்றை நம் வாசகர்களுக்கு சொல்ல விரும்புகிறாம். தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டிணம் மண்டலத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 190 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்தனை நாள் குடிசையில் வாழ்ந்த நமக்கு இப்போதுதாவது விடிவுகாலம் பிறந்ததே...?! என்று சந்தோஷகத்தில் திளைத்த மக்கள், அதிகாரிகள் சொன்ன பதிலால் திகைத்துப் போனார்கள்.
முன்பணம் போட்டு நீங்கள்தான் வீடு கட்ட வேண்டும், அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் பில் கொடுத்து நீங்கள் செலவழித்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான். 190 வீடுகள் கட்டப்படும் என்று இருந்த நிலையில் தற்போது 9 வீடுகளே கட்டப்பட்டு வருகிறது. மற்றவர்கள் நாங்கள் இந்த குடிசை வீட்டிலேயே இருந்து விடுகிறோம். எங்களால் முன்பணம் போட்டு வீடு கட்டமுடியாது என்று கூறிவிட்டு மறுத்துவிட்டனர்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் மட்டும் அல்ல தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழக அரசு, இலவச வீடு திட்டம் என்ற பெயரில் இப்படி வதைக்கலாமா ஏழைகளை?!
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முதல் வீட்டை கடந்த 10ஆம் தேதி கடலூரில் பயனாளி ஒருவருக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்த கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தால் பொதுமக்களுக்கு என்ன பயன் என்பதுதான் கேள்வி.
இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட தமிழக அரசு சார்பில் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். எப்படி அந்தப் பணம் வழங்கப்படுகிறது என்றால், முதலில் வீட்டிற்கு அஸ்திவாரம் போட 6 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. எப்போது என்றால், முன்பணம் 6 ஆயிரம் ரூபாய் போட்டு அஸ்திவாரம் போட வேண்டுமாம். பின்னர் அதற்குரிய பில்லை காட்டி 6 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதைத் தொடர்ந்து 56 கிலோ கம்பி, 56 கிலோ சிமெண்ட் மூட்டை வாங்க அரசு அனுமதி அளிக்கிறது. இதனை அனைத்தையும் வாங்கி வீடு கட்டும் அந்த பயனாளி, பில் காட்டி அதற்குண்டான பணத்தை பெற்றுக் கொள்கிறார். இதையடுத்து ஜன்னல், கதவு வாங்க 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதுவும் முன்பணம் போட்டு கதவு, ஜன்னல் வைத்து பில் காட்டியபிறகே 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது.
இப்படி முன்பணம் போட்டு வீடு கட்டும் அளவில் ஏழை மக்கள் இல்லை. இப்படி முன்பணம் போட்டு வீடு கட்டும் நிலை இருந்தால் ஏன் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் வீடு கட்ட நினைப்பார்கள்.
நடந்த நிகழ்வு ஒன்றை நம் வாசகர்களுக்கு சொல்ல விரும்புகிறாம். தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டிணம் மண்டலத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 190 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்தனை நாள் குடிசையில் வாழ்ந்த நமக்கு இப்போதுதாவது விடிவுகாலம் பிறந்ததே...?! என்று சந்தோஷகத்தில் திளைத்த மக்கள், அதிகாரிகள் சொன்ன பதிலால் திகைத்துப் போனார்கள்.
முன்பணம் போட்டு நீங்கள்தான் வீடு கட்ட வேண்டும், அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் பில் கொடுத்து நீங்கள் செலவழித்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான். 190 வீடுகள் கட்டப்படும் என்று இருந்த நிலையில் தற்போது 9 வீடுகளே கட்டப்பட்டு வருகிறது. மற்றவர்கள் நாங்கள் இந்த குடிசை வீட்டிலேயே இருந்து விடுகிறோம். எங்களால் முன்பணம் போட்டு வீடு கட்டமுடியாது என்று கூறிவிட்டு மறுத்துவிட்டனர்.
தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் மட்டும் அல்ல தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழக அரசு, இலவச வீடு திட்டம் என்ற பெயரில் இப்படி வதைக்கலாமா ஏழைகளை?!
சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும், பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை நேற்று (19) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனை போல பெருமளவான புகைப்படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களும், அதனை மேற்கொண்ட படை அதிகாரிகளும் தொளிவாக தெரிவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளர்.
இதனிடையே, இந்த புகைப்படங்கள் சிறீலங்கா அரசின் மிருகத்தனமான மனித உரிமை மீறல்களை காட்டுவதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ் ஏஜ இமானுவேல் அடிகள் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை நேற்று (19) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனை போல பெருமளவான புகைப்படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களும், அதனை மேற்கொண்ட படை அதிகாரிகளும் தொளிவாக தெரிவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளர்.
இதனிடையே, இந்த புகைப்படங்கள் சிறீலங்கா அரசின் மிருகத்தனமான மனித உரிமை மீறல்களை காட்டுவதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ் ஏஜ இமானுவேல் அடிகள் தெரிவித்துள்ளார்.
Friday, October 15, 2010
ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கா உதவுமா?
இது காலம் கடந்த கேள்வியாக இருப்பினும் நம்பி ஏமாறுவதை எதிர் வரும் காலத்தில் தவிர்ப்பதற்காக விடை காணும் தேவை எழுந்துள்ளது அமெரிக்காவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஒரு பெரிய விடையம் அல்ல என்றாலும் அதை அமெரிக்காவால் முற்றாகப் புறந்தள்ள முடியாது.
அமெரிக்காவின் 44ம் சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடந்த செனற் தேர்தலில் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற தன்னார்வக் குழு தனது முழு ஆதரவை ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியது இந்தக் கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா போட்டியிட்டார்.
தமிழ் ஈழத்தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர்கள் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் அனைவரும் அமெரிக்க குடி மக்களாவர்.
இன்னும் இரண்டு முக்கிய தமிழர் அமைப்புக்கள் அமெரிக்காவில் இருக்கின்றன ஒன்று இனப் படுகொலைக்கு எதிரான அமைப்பு அடுத்தது சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு இவை இரண்டும் விதம் விதமான எதிர்பார்ப்புக்களுடன் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்கின.
தேர்தல் மேடை தோறும் ஒபாமா அமெரிக்க அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாகக் குரல் கொடுத்தார் மாற்றத்தின் தன்மையை அவர் பட்டியல் இடவில்லை பதவிக்கு வந்த பின் அவருடைய அரசியல் கொள்கை வழமையான அமெரிக்கக் கொள்கையின் நீட்சியாக இருந்தது, தொடர்ந்து இருக்கிறது.
“மாற்றம்” என்றவர் ஏமாற்றி விட்டார் என்பதை அமெரிக்கா வாழ் தமிழர்கள் உணர்ந்தனர் ஏமாறச் சொன்னது நானா என்று ஒபாமா கேட்கலாம் இது அவருடைய உரிமை ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொடிய போரை ஒபாமா முன்னின்று நிறுத்துவார் என்பது தமிழர் எதிர்பார்ப்பு.
அந்த எதிர்பார்ப்பு பொய்த்து விட்டதை அண்மைக்கால வரலாறு எடுத்துச் சொல்லும் தமது இடர் துடைக்க அமெரிக்கன் வருவான் என்று முள்ளிவாய்க்காலில் செத்துக் கொண்டிருந்தவர்கள் எதிர் பார்த்தனர் உயிர் பிரியும் வரை காத்திருக்கும் பிணம் தின்னிக் கழுகுபோல் அமெரிக்கா விலகி நின்றதை ஈழத்தமிழர்கள் அறிவார்கள்.
தனி மனிதராக ஒபாமாவால் ஒன்றுமே செய்ய முடியாது அவர் அமெரிக்கத் தேசிய நலனுக்கு அடிமை விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஆட்சி செய்த காலத்தில் அமெரிக்க வெளி விவகாரத் திணைக்களம் தயாரித்த இரகசியத் திட்ட வரைவு வெளியுலகிற்கு கசிய விடப்பட்டது.
இலங்கைத் தீவில் இரு அதிகார மையங்கள் இருக்க அனுமதிக்கக் கூடாது ஒன்றை இல்லா தொழிக்க வேண்டும். அந்த வேலையை அமெரிக்க நேரடியாகச் செய்யக் கூடாது. நட்பு நாடுகளை ஏவி அவர்கள் மூலம் கிளிநொச்சி அரசை அழிக்க வேண்டும்
அமெரிக்க நலனுக்குத் திருகோணமலைத் துறைமுகம் அத்தியாவசியம் அதை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு விடுதலைப் புலிகள் முட்டுக் கடடையாக இருக்கிறார்கள். அவர்களை அகற்ற வேண்டும்.
போர் நிறுத்தம் பேச்சு வார்த்தை நாலாம் ஈழப் போர் என்பன அமெரிக்காவின் வழிகாட்டலில் நடைபெற்றன பங்காளி இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இன அழிப்புப் போரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றன.
அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் இரு முக்கிய வளர்ச்சி போக்குகளை விமர்சகர்கள் அடையாளம் கண்டுள்ளனர் அமெரிக்க இராணுவத்தை ஈடுபடுத்தும் சந்தர்ப்பங்களை இயன்ற மட்டும் குறைத்துக் கொள்ளுதல் பிற நாட்டு இராணுவங்களுக்குப் பயிற்சி ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி அமெரிக்க நலனை முன்னெடுத்தல்.
இரண்டாவதாக ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருந்த கொள்கையை ஆசியா, ஆபிரிக்கா உள்ளடங்களான மூன்றாம் உலகின் பக்கம் தீவிரமாகத் திருப்ப வேண்டும் இந்து மாகடலைத் தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் நாடுதான் உலக வல்லரசாகத் திகழப் போகிறது.
ஈழத்தமிழ்ப் பொது மக்களுக்குப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் பயிற்சியையும் செய்முறைகளையும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கியது அமெரிக்கா தான் கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகி செத்து மடிந்த பொது மக்கள் பள்ளிச் சிறுவர்கள் நோயாளர்கள் பற்றி அமெரிக்கா கவலைப்பட்டதாக தெரியவில்லை.
தனது கொள்கை முன்னெடுப்பிற்கு மிகவும் உகந்தவரான றொபேட் ஓ பிளேக் என்பவரைத் தனது இராஜதந்திரத் தூதுவராக சிறிலங்காவிற்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது சிறப்பாக செயற்பட்டதற்காக அவர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
றொபேட் ஓ பிளேக் ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானவர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போருக்கு அவர் பயங்கரவாத முத்திரை குத்தினார். அமெரிக்கத் தூதுவராகப் பதவி வகித்த காலத்தில் 2008 மார்ச் 18ம் நாள் றொபேட் ஓ பிளேக் பயங்கரவாதத்திற்கு எதிரான உபகரணங்களை அமெரிக்கா சார்பில் சிறிலங்கா இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் வழங்கினார் பயிற்சி வழங்கல் பற்றியும் அவர் பேச்சுக்கள் நடத்தினார்.
அண்மையில் தனது புதிய பதவியுடன் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வந்த போது சம்பந்தன் தலைமையிலான கூட்டணியினர் அவரைச் சந்தித்தனர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வின் தேவையை அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்குப் பதிலலித்த றொபேட் ஓ பிளேக் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் நிலைபாட்டை வழி மொழிந்தார் அரசியல் தீர்வுக்கு இப்போது என்ன அவசரம் முதலில் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்போமே என்றார் அவர்.
போர் முடிந்த 2009ம் ஆண்டின் செப்ரெம்பர் 07ம் நாள் அமெரிக்க செனேற் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் ஜோன் கெரி சிறிலங்கா தொடர்பான நீண்ட அறிக்கையை வெளியிட்டார் போருக்குப் பின்னர் சிறிலங்கா தொடர்பான அமெரிக்கக் கொள்கையை மறுசீரமைத்தல் என்பது அறிக்கைத் தலைப்பு.
மறுசீரமைப்பு என்ற பதம் தேவையற்றது ஏற்கனவே நடை முறையில் உள்ள கொள்கையைத் தான் அமெரிக்கா இயன்ற வரை முன்னெடுக்கின்றது அதில் ஈழத்தமிழரைத் தோல்வியுறச் செய்வது முதலிடம் வகிக்கிறது
அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருக்கும் தம்பி போல் இனி தங்கு தடையின்றி நுளைய வேண்டியது தான் பாக்கி இது அமெரிக்க நிலைப்பாடு. டியோ கார்சியா தீவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரையும் பிரிட்டிஷ் அரசின் உதவியோடு நிரந்தரமாக வெளியேற்றி விட்டு இராணுவ தளம் அமைத்த அமெரிக்காவுக்கு ஈழத்தமிழர்களின் துயரம் பற்றிய கரிசனை ஏன் வரப் போகிறது.
சிறிலங்காவை இழக்க அமெரிக்காவுக்குக் கட்டுபடியாகாது என்ற செய்தி கெரி அறிக்கையில் வலியுறுத்தப்படுகிறது உறவை பலப்படுத்துவதோடு பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இராஐதந்திர அனுசரனை வழங்குவது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.
இது வரை இரகசியமாக நடத்தப்பட்டதை இனி பகிரங்கமாக நடத்தலாம் என்ற நிலைக்கு அமெரிக்க அரசு வந்துள்ளது ராக் என்ற சுருக்கு பெயரால் அறியப்படும் தமிழர்களின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு மிகவும் கசப்பான பாடத்தை அண்மையில் கற்றுள்ளது அமெரிக்கா, சிறிலங்கா ஆகியவற்றின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாதுகாப்புச் செயலர் கொத்தபாயா ராஜபக்ச சென்ற மாதம் அமெரிக்கா வந்தார்.
இன அழிப்புக் குற்றங்களுக்காக அவரைக் கைது செய்யும் படி ராக் அமைப்பு கேட்டதை அமெரிக்க அரசு அலட்சியம் செய்தது கொத்தபாயா அரச விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டார் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க நிதி உதவி வழங்கிய அமெரிக்கத் தமிழர்களின் பெயர்ப் பட்டியல் அடங்கிய கோப்பை அமெரிக்க அரசிடம் கொத்தபாயா வழங்கினார் ராஜபக்ச குடும்பத்தில் ஒருவராகி விட்ட குமரன் பத்மநாதன் என்ற கே.பி இந்தப் பட்டியலைத் தயாரித்திருந்தார்.
ஏப்.பி.ஜ, சி.ஐ.ஏ போன்ற அமெரிக்க உளவுத்துறையினர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான வேட்டையைத் தொடங்குவதற்கு இந்தக் கோப்பு ஆதரமாக விளங்குகிறது. செயலாளர் நாயகம் பான் கீ.மூன் சிறிலங்கா புரிந்த போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தார் ஆனால் இந்தக் குழு தனது பணிகளைத் தொடங்கவே இல்லை.
சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் சிறிலங்கா சார்பாக நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன அமெரிக்காவும் இவர்களோடு இணைந்து செயற்படும் சாத்தியம் தென்படுகிறது பான் கீ மூனின் செயற்பாடுகள் மந்த கதியில் செல்வதற்கு அவருடைய இயலாமை காரணமாகியுள்ளது அவருடைய முடிவுகள் அரசியல் முடிவுகளாக இருக்கின்றன போர் குற்றங்கள் தொடர்பான சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கிடப்பில் போடும் நோக்குடன் அமெரிக்கா செயற்படுகிறது
பான் கீ மூனின் விசாரணைக் குழு ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது விசாரணைக் குழுவின் ஆரம்பமும் முடிவும் அக்கம் பக்கமாக இருக்கின்றன. எரியிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்பார்கள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பனிப்போர் அல்லது சுடு போர் தொடங்கினால் ஏதேனும் இலாபம் கிடைக்குமா என்று சிலர் கணக்கிடுகின்றனர்.
தனது பொருளாதார மேம்பாட்டிற்காக அமெரிக்கா விற்பனை செய்யும் திறைசேரி கடன் பத்திரங்களைச் சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கொள்வனவு செய்துள்ளன. மிகக் கூடுதலாக பத்திரங்களைச் சீனா கொள்வனவு செய்துள்ளது அமெரிக்கா சீனாவின் கடனாளி நாடு சீனாவைப் பகைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு இயலாது சீனாவும் பாக்கிஸ்தானும் கூட்டாகத் தன் மீது தாக்குதல் நடத்தனால் அமெரிக்கா உதவிக்கு வரும் என்று இந்தியக் கொள்ளை வகுப்பாளர்கள் நம்புகின்றனர் இது சாத்தியப்படுவது மிகக் கடினம்.
புதிய வியூகங்கள் வகுக்கப்படுகின்றன ஈழத்தமிழர் நிலை திருப்தியாகத் தற்சமயத்தில் இல்லாவிட்டாலும் சோர்வின்றிச் செயற்படுவது எம்மவர் கடனாகும். நெருக்கடி நேரத்தில் குழம்பிப் போய்நிற்கக் கூடாது ஐனநாயகவழியில் தொடர்ந்து விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் 44ம் சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடந்த செனற் தேர்தலில் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற தன்னார்வக் குழு தனது முழு ஆதரவை ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியது இந்தக் கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா போட்டியிட்டார்.
தமிழ் ஈழத்தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர்கள் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் அனைவரும் அமெரிக்க குடி மக்களாவர்.
இன்னும் இரண்டு முக்கிய தமிழர் அமைப்புக்கள் அமெரிக்காவில் இருக்கின்றன ஒன்று இனப் படுகொலைக்கு எதிரான அமைப்பு அடுத்தது சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு இவை இரண்டும் விதம் விதமான எதிர்பார்ப்புக்களுடன் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்கின.
தேர்தல் மேடை தோறும் ஒபாமா அமெரிக்க அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாகக் குரல் கொடுத்தார் மாற்றத்தின் தன்மையை அவர் பட்டியல் இடவில்லை பதவிக்கு வந்த பின் அவருடைய அரசியல் கொள்கை வழமையான அமெரிக்கக் கொள்கையின் நீட்சியாக இருந்தது, தொடர்ந்து இருக்கிறது.
“மாற்றம்” என்றவர் ஏமாற்றி விட்டார் என்பதை அமெரிக்கா வாழ் தமிழர்கள் உணர்ந்தனர் ஏமாறச் சொன்னது நானா என்று ஒபாமா கேட்கலாம் இது அவருடைய உரிமை ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொடிய போரை ஒபாமா முன்னின்று நிறுத்துவார் என்பது தமிழர் எதிர்பார்ப்பு.
அந்த எதிர்பார்ப்பு பொய்த்து விட்டதை அண்மைக்கால வரலாறு எடுத்துச் சொல்லும் தமது இடர் துடைக்க அமெரிக்கன் வருவான் என்று முள்ளிவாய்க்காலில் செத்துக் கொண்டிருந்தவர்கள் எதிர் பார்த்தனர் உயிர் பிரியும் வரை காத்திருக்கும் பிணம் தின்னிக் கழுகுபோல் அமெரிக்கா விலகி நின்றதை ஈழத்தமிழர்கள் அறிவார்கள்.
தனி மனிதராக ஒபாமாவால் ஒன்றுமே செய்ய முடியாது அவர் அமெரிக்கத் தேசிய நலனுக்கு அடிமை விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஆட்சி செய்த காலத்தில் அமெரிக்க வெளி விவகாரத் திணைக்களம் தயாரித்த இரகசியத் திட்ட வரைவு வெளியுலகிற்கு கசிய விடப்பட்டது.
இலங்கைத் தீவில் இரு அதிகார மையங்கள் இருக்க அனுமதிக்கக் கூடாது ஒன்றை இல்லா தொழிக்க வேண்டும். அந்த வேலையை அமெரிக்க நேரடியாகச் செய்யக் கூடாது. நட்பு நாடுகளை ஏவி அவர்கள் மூலம் கிளிநொச்சி அரசை அழிக்க வேண்டும்
அமெரிக்க நலனுக்குத் திருகோணமலைத் துறைமுகம் அத்தியாவசியம் அதை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு விடுதலைப் புலிகள் முட்டுக் கடடையாக இருக்கிறார்கள். அவர்களை அகற்ற வேண்டும்.
போர் நிறுத்தம் பேச்சு வார்த்தை நாலாம் ஈழப் போர் என்பன அமெரிக்காவின் வழிகாட்டலில் நடைபெற்றன பங்காளி இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இன அழிப்புப் போரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றன.
அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் இரு முக்கிய வளர்ச்சி போக்குகளை விமர்சகர்கள் அடையாளம் கண்டுள்ளனர் அமெரிக்க இராணுவத்தை ஈடுபடுத்தும் சந்தர்ப்பங்களை இயன்ற மட்டும் குறைத்துக் கொள்ளுதல் பிற நாட்டு இராணுவங்களுக்குப் பயிற்சி ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி அமெரிக்க நலனை முன்னெடுத்தல்.
இரண்டாவதாக ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருந்த கொள்கையை ஆசியா, ஆபிரிக்கா உள்ளடங்களான மூன்றாம் உலகின் பக்கம் தீவிரமாகத் திருப்ப வேண்டும் இந்து மாகடலைத் தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் நாடுதான் உலக வல்லரசாகத் திகழப் போகிறது.
ஈழத்தமிழ்ப் பொது மக்களுக்குப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் பயிற்சியையும் செய்முறைகளையும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கியது அமெரிக்கா தான் கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகி செத்து மடிந்த பொது மக்கள் பள்ளிச் சிறுவர்கள் நோயாளர்கள் பற்றி அமெரிக்கா கவலைப்பட்டதாக தெரியவில்லை.
தனது கொள்கை முன்னெடுப்பிற்கு மிகவும் உகந்தவரான றொபேட் ஓ பிளேக் என்பவரைத் தனது இராஜதந்திரத் தூதுவராக சிறிலங்காவிற்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது சிறப்பாக செயற்பட்டதற்காக அவர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
றொபேட் ஓ பிளேக் ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானவர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போருக்கு அவர் பயங்கரவாத முத்திரை குத்தினார். அமெரிக்கத் தூதுவராகப் பதவி வகித்த காலத்தில் 2008 மார்ச் 18ம் நாள் றொபேட் ஓ பிளேக் பயங்கரவாதத்திற்கு எதிரான உபகரணங்களை அமெரிக்கா சார்பில் சிறிலங்கா இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் வழங்கினார் பயிற்சி வழங்கல் பற்றியும் அவர் பேச்சுக்கள் நடத்தினார்.
அண்மையில் தனது புதிய பதவியுடன் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வந்த போது சம்பந்தன் தலைமையிலான கூட்டணியினர் அவரைச் சந்தித்தனர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வின் தேவையை அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்குப் பதிலலித்த றொபேட் ஓ பிளேக் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் நிலைபாட்டை வழி மொழிந்தார் அரசியல் தீர்வுக்கு இப்போது என்ன அவசரம் முதலில் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்போமே என்றார் அவர்.
போர் முடிந்த 2009ம் ஆண்டின் செப்ரெம்பர் 07ம் நாள் அமெரிக்க செனேற் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் ஜோன் கெரி சிறிலங்கா தொடர்பான நீண்ட அறிக்கையை வெளியிட்டார் போருக்குப் பின்னர் சிறிலங்கா தொடர்பான அமெரிக்கக் கொள்கையை மறுசீரமைத்தல் என்பது அறிக்கைத் தலைப்பு.
மறுசீரமைப்பு என்ற பதம் தேவையற்றது ஏற்கனவே நடை முறையில் உள்ள கொள்கையைத் தான் அமெரிக்கா இயன்ற வரை முன்னெடுக்கின்றது அதில் ஈழத்தமிழரைத் தோல்வியுறச் செய்வது முதலிடம் வகிக்கிறது
அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருக்கும் தம்பி போல் இனி தங்கு தடையின்றி நுளைய வேண்டியது தான் பாக்கி இது அமெரிக்க நிலைப்பாடு. டியோ கார்சியா தீவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரையும் பிரிட்டிஷ் அரசின் உதவியோடு நிரந்தரமாக வெளியேற்றி விட்டு இராணுவ தளம் அமைத்த அமெரிக்காவுக்கு ஈழத்தமிழர்களின் துயரம் பற்றிய கரிசனை ஏன் வரப் போகிறது.
சிறிலங்காவை இழக்க அமெரிக்காவுக்குக் கட்டுபடியாகாது என்ற செய்தி கெரி அறிக்கையில் வலியுறுத்தப்படுகிறது உறவை பலப்படுத்துவதோடு பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இராஐதந்திர அனுசரனை வழங்குவது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.
இது வரை இரகசியமாக நடத்தப்பட்டதை இனி பகிரங்கமாக நடத்தலாம் என்ற நிலைக்கு அமெரிக்க அரசு வந்துள்ளது ராக் என்ற சுருக்கு பெயரால் அறியப்படும் தமிழர்களின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு மிகவும் கசப்பான பாடத்தை அண்மையில் கற்றுள்ளது அமெரிக்கா, சிறிலங்கா ஆகியவற்றின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாதுகாப்புச் செயலர் கொத்தபாயா ராஜபக்ச சென்ற மாதம் அமெரிக்கா வந்தார்.
இன அழிப்புக் குற்றங்களுக்காக அவரைக் கைது செய்யும் படி ராக் அமைப்பு கேட்டதை அமெரிக்க அரசு அலட்சியம் செய்தது கொத்தபாயா அரச விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டார் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க நிதி உதவி வழங்கிய அமெரிக்கத் தமிழர்களின் பெயர்ப் பட்டியல் அடங்கிய கோப்பை அமெரிக்க அரசிடம் கொத்தபாயா வழங்கினார் ராஜபக்ச குடும்பத்தில் ஒருவராகி விட்ட குமரன் பத்மநாதன் என்ற கே.பி இந்தப் பட்டியலைத் தயாரித்திருந்தார்.
ஏப்.பி.ஜ, சி.ஐ.ஏ போன்ற அமெரிக்க உளவுத்துறையினர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான வேட்டையைத் தொடங்குவதற்கு இந்தக் கோப்பு ஆதரமாக விளங்குகிறது. செயலாளர் நாயகம் பான் கீ.மூன் சிறிலங்கா புரிந்த போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தார் ஆனால் இந்தக் குழு தனது பணிகளைத் தொடங்கவே இல்லை.
சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் சிறிலங்கா சார்பாக நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன அமெரிக்காவும் இவர்களோடு இணைந்து செயற்படும் சாத்தியம் தென்படுகிறது பான் கீ மூனின் செயற்பாடுகள் மந்த கதியில் செல்வதற்கு அவருடைய இயலாமை காரணமாகியுள்ளது அவருடைய முடிவுகள் அரசியல் முடிவுகளாக இருக்கின்றன போர் குற்றங்கள் தொடர்பான சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கிடப்பில் போடும் நோக்குடன் அமெரிக்கா செயற்படுகிறது
பான் கீ மூனின் விசாரணைக் குழு ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது விசாரணைக் குழுவின் ஆரம்பமும் முடிவும் அக்கம் பக்கமாக இருக்கின்றன. எரியிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்பார்கள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பனிப்போர் அல்லது சுடு போர் தொடங்கினால் ஏதேனும் இலாபம் கிடைக்குமா என்று சிலர் கணக்கிடுகின்றனர்.
தனது பொருளாதார மேம்பாட்டிற்காக அமெரிக்கா விற்பனை செய்யும் திறைசேரி கடன் பத்திரங்களைச் சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கொள்வனவு செய்துள்ளன. மிகக் கூடுதலாக பத்திரங்களைச் சீனா கொள்வனவு செய்துள்ளது அமெரிக்கா சீனாவின் கடனாளி நாடு சீனாவைப் பகைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு இயலாது சீனாவும் பாக்கிஸ்தானும் கூட்டாகத் தன் மீது தாக்குதல் நடத்தனால் அமெரிக்கா உதவிக்கு வரும் என்று இந்தியக் கொள்ளை வகுப்பாளர்கள் நம்புகின்றனர் இது சாத்தியப்படுவது மிகக் கடினம்.
புதிய வியூகங்கள் வகுக்கப்படுகின்றன ஈழத்தமிழர் நிலை திருப்தியாகத் தற்சமயத்தில் இல்லாவிட்டாலும் சோர்வின்றிச் செயற்படுவது எம்மவர் கடனாகும். நெருக்கடி நேரத்தில் குழம்பிப் போய்நிற்கக் கூடாது ஐனநாயகவழியில் தொடர்ந்து விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
Wednesday, October 13, 2010
என் மனம்
நன்றி இது எனுடைய முதல் ப்ளாக் கருத்து
என் அன்பு தமிழ் சகோதரர்கலே இன்று முதல் நான் உங்களை என் சிந்தனை குள் கொண்டுவர போகிறான்
இப்படிக்கு உங்கள் ,
ராஜபாரதி
என் அன்பு தமிழ் சகோதரர்கலே இன்று முதல் நான் உங்களை என் சிந்தனை குள் கொண்டுவர போகிறான்
இப்படிக்கு உங்கள் ,
ராஜபாரதி
Subscribe to:
Posts (Atom)