Wednesday, December 1, 2010

பாலியல் பலாத்காரம்: சிங்கள இராணுவத்தின் கொடூரம் மீண்டும் அம்பலம்

கடந்தவருடம் சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகள் மீது மேற்கொண்ட யுத்தத்தின் போது புரிந்த அட்டூழியங்கள், சித்ரவதைகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் சேனல் 4 தொலைக்காட்சி, மீண்டும் ஒரு காணொளியை ஒளிபரப்பியுள்ளது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று லண்டனுக்கு வருகை தந்த நிலையில், நாளை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ளார்.

இந்நிலையில் அடிக்கடி சிறிலங்காவின் போர்க்குற்றங்களை ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும் சேனல் 4 தொலைக்காட்சி, நேற்றும் ஒரு போர்க்குற்ற வீடியோ பதிவை வெளியிட்டது.

மகிந்தவின் லண்டன் பயணத்தை எதிர்த்து குளிர்காலநிலையையும் பொருட்படுத்தாமல் விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தியும் , அந்த எதிர்ப்புக்களை கருத்தில்கொள்ளாமல் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை அனுமதித்தது பிரிட்டன் அரசாங்கம்.

ஆனால் நேற்றைய சேனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிங்கள இராணுவத்தினரின் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் குறித்த காட்சிகள் ராஜபக்சவுக்கு அதிர்ச்சியையும், பிரிட்டன் அரசாங்கத்திற்கும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment